September 27, 2015

இலங்கை நடுக்கடலில் தத்தளித்து கிடந்த படகுடன் தமிழக மீனவர்கள் மூவர் மீட்பு!

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களின் படகு நடுக்கடலில் பழுதடைந்ததால் இலங்கை கடற்பரப்பிற்குள் தத்தளித்துகொண்டிருந்த நிலையில் பழுதடைந்த படகுடன் மூன்று தமிழக மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் மீட்டுள்ளதாக
தெரிவிக்கபடுகிறது.
குறித்த மீனவர்களையும் படகையும் தலைமன்னார் கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் குறித்த தமிழக மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் படகை பழுதுபார்த்து பின் மீனவர்களையும் படகையும் இந்திய இலங்கை கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

No comments:

Post a Comment