September 24, 2015

யாழ். காரைநகர் கடற்பகுதியில் அத்துமீறிய ஆறு இந்திய மீனவர்கள் கைது!

இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் 6 இந்திய மீனவர்களும் அவர்களுடைய இரு படகுகளும் இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ். காரைநகர் கடற்பகுதியில் இன்று காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் மலேரியா காய்ச்சல் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர் யாழ்.கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்னனர்.
குறித்த இந்திய மீனவர்கள் நாளையதினம் நீதிமன்றில் இவர்கள் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
கைதான மீனவர்கள் இராமேஸ்வரம் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.


No comments:

Post a Comment