September 30, 2015

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!(படங்கள் இணைப்பு)

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் மக்கள் பயன்படுத்தும் கிணற்றிலிருந்து குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சிறுப்பிட்டி வைரவர் கோவிலடியை சேர்ந்த ஜெ.விஜயமாலா (வயது41) என்பவரே இவ்வாறு
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்தமூன்று பிள்ளைகளின் தாய் இன்றைய தினம் அதிகாலை 2 மணிக்கு வேலைக்குச் சென்ற கணவருக்கு தேனீர் கொடுத்துவிட்டு சாதாரணமாக இருந்த நிலையில் சற்று நேரமாக காணாமல் போனதாகவும்,
பின்னர் இன்றைய தினம் காலை கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றவர் சடலத்தை கிணற்றில் கண்டெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்டுள்ள மல்லாகம் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணி சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment