September 23, 2015

கடுவலை நீதிமன்றத்திலிருந்து இரண்டு கைதிகள் தப்பியோட்டம்

கடுவலை நீதிமன்றத்திலிருந்து இன்று இரண்டு கைதிகள் தப்பியோடி உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று காலை கடுவலை நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினை அடுத்து ஏற்பட்ட பதட்டமான சூழலின் மத்தியில் இவர்கள் தப்பியோடி இருப்பதாக தெரியவந்துள்ளது.

தெடிகமுவ பகுதியைச்சேர்ந்த தினித் மிலான், சமிந்த புத்திக ஆகியோரே இவ்வாறு நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிய கைதிகள் இரண்டுபேரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமயங் எனப்படும் படேபொல அருணவுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் கைவிலங்குடன் தப்பிச்சென்றுள்ளனரா? கைவிலங்கை கழற்றிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனரா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியவில்லை.

தப்பியோடிய கைதிகளை தேடி பொலிசாரும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கூட்டு தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment