September 22, 2015

கொழும்பு கோட்டை ரயிலில் ஏற முற்பட்ட 25 வயது யுவதி உயுரிழப்பு!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதத்திற்கு ஏற முற்பட்ட வேளை தவறிவிழுந்து விபத்துக்குள்ளானதில் இளவயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி புறப்பட இருந்த புகையிரதத்தில் ஏற முற்பட்ட வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
25 வயதுடைய ராகமை பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment