September 22, 2015

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாகை மீனவர் 15 பேர் இவ்வாறு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிடிபட்ட 15 மீனவர்களும் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த மீனவர்களை காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்தாகவும், தங்களது விசாரணைக்கு பின் 15 மீனவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக த்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிக்கப்பட்டு 4 நாட்களே ஆன நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment