September 15, 2015

பளையில் 25 குரங்குகளை பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்த விவசாயிகள்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி விடத்தல் பளை பகுதியில் விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்துவந்த குரங்குகளை அப்பகுதி விவசாயிகள் பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
மேற்படி பகுதியில் குரங்குகள் விவசாயத்திற்கு பெரும் நஷ்டம் விளைவித்து வந்த நிலையில் அப்பகுதி விவசாயிகள் சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் நேற்றைய தினம் 25 குரங்குகள் பொறிவைத்து பிடிக்கப்பட்டன.
இவை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு வில்பத்து வனப்பகுதியில் விடப்படவுள்ளது.

No comments:

Post a Comment