August 20, 2015

ஈழமும், தமிழகமும் - ஆய்வரங்கம் -மே பதினேழு இயக்கம்!(படம் இணைப்பு)

ஈழ விடுதலையை முற்றிலுமாக அழிக்கும் வேலையில் சர்வதேசம் தீவிரமாக இறங்கியுள்ள, ஈழ விடுத்லைக் கோரிக்கையைக் காக்க வேண்டியதில் தமிழகத்திற்கு முக்கியமான பங்கு இருக்கிறது.
இந்நிலையில் சர்வதேச நகர்வுகள் என்னவாய் இருக்கப் போகிறது என்பதை ஆராய்ந்து பேசுவது முக்கியாமானதென கருதுகிறோம். அதற்காக வரும் சனிக்கிழமை(22-8-2015) மாலையில் இது குறித்த கருத்தரங்கத்தினை நடத்தி, எங்கள் ஆய்வுகளைப் பகிர்கிறோம். கடந்த ஒரு வருடங்களில் நமக்கு எதிராக இந்தியாவும், சர்வதேசமும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் இந்த ஆய்வரங்கம் நடைபெற உள்ளது.

ஈழவிடுதலை போராட்டத்தை குறித்த நமது செயல்பாடுகளை பின்னுக்கு தள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் சமர்பிக்கப் படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம்.
இந்நிகழ்வில் பங்கேற்க தோழர்கள் அனைவரையும் அழைக்கிறோம். அனைவரும் வாருங்கள்.

மே 17 இயக்கம்.

No comments:

Post a Comment