August 4, 2015

வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பதை பொது மக்கள் விரும்பவில்லை – கஜேந்திரகுமார்!

வடமாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரபல்யத் தன்மை மங்கி வருகிறது.
 
இந்த கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர்.
 
கூட்டமைப்பு மீதான அதிருப்தியே இதற்கான காரணம்.
 
இந்த முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறைந்த பட்சம் 2 ஆசனங்களை வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment