கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்னகர் கிராமத்தின் முதலாம் கட்டைப்பகுதி மக்கள் நீரின்றி பெரும் நெருக்கடியில்
வாழ்ந்து வருகின்றனர். சுமார் 260 குடும்பங்கள் வாழ்கின்ற குறித்த பிரதேசத்.தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடிப்பதற்கு கூட நீரை பெற்றுக்கொள்வதற்கு நாளாந்தம் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மேற்படி பிரதேசத்தில் உள்ள பொது கிணறு ஒன்றில் நீரை பெற்றுக்கொள்வதற்காக சுற்று ஒழுங்கில் காத்திருந்து நீர் ஊற்றெடுத்து நிரம்ப நிரம்ப பெற்றுச்செல்லும் அவல நிலையே காணப்படுகிறது. அதிகாலையில் கிணற்றில் ஊறியுள்ள நீரை குடிப்பதற்கு மட்டும் மேற்படி குடும்பங்கள் பெற்றுக்கொள்கின்றன. பின்னர் ஏனைய தேவைகளுக்காக காத்திருந்து ஒவ்வொரு குடும்பமும் முப்பது அல்லது நாற்பது லீற்றர் நீரை மட்டுமே பெற்றுக்கொள்ளும் நிலை தொடர்ந்து வருகிறது.
சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு விரைவாக தீர்வைக் காண வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.
No comments:
Post a Comment