தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கல்முனைக்கு நியமிக்க கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயமுன்
றலில் சுழற்சி முறையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் இங்கு வாழும் சகோதர இன அரசியல்வாதிகளினால் பல்வேறு நெருக்குவாரங்களுக்குட்பட்டு வாழ்வதாகவும் அம்பாறையில் தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கும் தேசியப்பட்டியல் மூலம் உறுப்பினர் ஒருவரை இங்கு வழங்க வேண்டும் என தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் கலந்து கொண்டுள்ள மக்கள் “அரசியல் அநாதைகளான எங்களுக்கு ஆதரவு தாருங்கள்”கல்முனைத்தொகுதி தமிழ் மக்களின் தன்மானம் காத்திடுங்கள் தமிழ் தேசியத்தின் உணர்விற்கு மதிப்பளியுங்கள் அண்ணன் வேல் முருகு கனவினை நனவாக்குங்கள் தேசியப்பட்டியல் உறுப்புரிமையை கல்முனைத்தொகுதிக்கு வழங்குங்கள் போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் கு.ஏகாம்பரம் கருத்து தெரிவிக்கையில் அம்பாறை மாவட்டத்தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவ்விகிதாசார தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு 8 பாராளுமன்ற உறுப்பினர்களை பொத்துவில் தொகுதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். இதுவரை கல்முனைத்தொகுதிக்கு எவரும் தெரிவாகவில்லை.
கல்முனையில் வாழும் தமிழர்கள் நெருக்கு வாரங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.கல்முனை யாருடைய இதயம் என்ற பெரும் சர்ச்சையுள்ளது. இங்கு இழந்தவைகளை மீளப்பெறா விட்டாலும் இருப்பதையாவது பாதுகாப்பதற்கு தேசியப்பட்டியல் உறுப்பினர்களை கல்முனைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார். தமக்கு சாதகமான பதில் கிடைக்கும்வரை இப்போராட்டம் தொடருமென மக்கள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் கலந்து கொண்டுள்ள மக்கள் “அரசியல் அநாதைகளான எங்களுக்கு ஆதரவு தாருங்கள்”கல்முனைத்தொகுதி தமிழ் மக்களின் தன்மானம் காத்திடுங்கள் தமிழ் தேசியத்தின் உணர்விற்கு மதிப்பளியுங்கள் அண்ணன் வேல் முருகு கனவினை நனவாக்குங்கள் தேசியப்பட்டியல் உறுப்புரிமையை கல்முனைத்தொகுதிக்கு வழங்குங்கள் போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் கு.ஏகாம்பரம் கருத்து தெரிவிக்கையில் அம்பாறை மாவட்டத்தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவ்விகிதாசார தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு 8 பாராளுமன்ற உறுப்பினர்களை பொத்துவில் தொகுதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். இதுவரை கல்முனைத்தொகுதிக்கு எவரும் தெரிவாகவில்லை.
கல்முனையில் வாழும் தமிழர்கள் நெருக்கு வாரங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.கல்முனை யாருடைய இதயம் என்ற பெரும் சர்ச்சையுள்ளது. இங்கு இழந்தவைகளை மீளப்பெறா விட்டாலும் இருப்பதையாவது பாதுகாப்பதற்கு தேசியப்பட்டியல் உறுப்பினர்களை கல்முனைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார். தமக்கு சாதகமான பதில் கிடைக்கும்வரை இப்போராட்டம் தொடருமென மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment