July 30, 2015

யாழ்.திருநெல்வேலி வாள்வெட்டு விவகாரம்! ஆவா குழுவை சேர்ந்தவர் கைது!

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஆவா குழவைச் சேர்ந்த ஒரு இளைஞர் நேற்று புதன்கிழமை நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை திருநெல்வேலிப் பகுதியில் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் மீது 2 மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு நடத்தியிருந்தனர்.. இச்சம்பவத்தில் 3 பேர் காயங்களுக்குடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாள்வெட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள வங்கியின் தானியங்கும் பணப்பரிமாற்று இயந்திரத்திற்கு (ஏ.ரி.எம்) முன்பாக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா (ரி.சி.ரி) கமெராவில் பதிவாக காட்சிளை வைத்து பொலிஸார் இன்று ஒரு இளைஞரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் இணுவில் பகுதியினைச் சேர்ந்தவர் என்றும், சமூகவிரோத ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment