July 6, 2015

தேர்தல் வியூகங்களை வகுக்க கூட்டமைப்பு ஒன்றுகூடியுள்ளது!

வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் காலை 10.30 மணிக்கு இக் கூட்டம் ஆரம்பித்துள்ள நிலையில் தேர்தலில் கூட்டமைப்பின் அனைத்து கட்சி உறுப்பினர்களும் எவ்வாறு தேர்தலில் பிரசாரங்களை முன்னேடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதேவேளை இக் கூட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்ப்தன், மாலை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த. சித்தார்த்தன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை இன்று மாலை கட்சித்தலைவர்களுக்கிடையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஆசன பங்கீடுகள் மற்றுமும வேட்பாளர்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது

No comments:

Post a Comment