July 7, 2015

அளவெட்டி தெற்க்கில் முன்னாள் போராளி கைது!

அளவெட்டி தெற்கு பகுதியில் முன்னாள் போராளியொருவரை நேற்று திங்கட்கிழமை  இரவு கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை காவல்துறை அறிவித்துள்ளது. சக்திவேல் இராஜகுமரன் (வயது 41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கடவுச்சீட்டு, நிலஅமைப்பு வரைபடங்கள், வங்கிப்புத்தகம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் செயற்பாட்டில் இவர் ஈடுபட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.இவர் புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லையெனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment