July 5, 2015

யாழ். இணுவில் பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம்!

யாழ். இணுவில் பகுதியில் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸார் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர். அதன்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சந்தேக நபர்கள் இருவர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார். அவர்களைப் பிடிப்பதற்காக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன்போது ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனை நடத்திய போது கஞ்சா கடத்திச் சென்றமை தெரியவந்தது. குறித்த நபரிடமிருந்து 250g கஞ்சா கைப்பற்றப்பட்டது. மோட்டர் சைக்கிளை மீட்ட பொலிஸார் மற்றைய நபரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment