July 6, 2015

50 முன்னாள் போராளிகளே புனர்வாழ்வளிப்புக்கு எஞ்சியுள்ளனராம்!

50 முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள் மாத்திரமே புனர்வாழ்வளிப்புக்கு எஞ்சி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளுது.

அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வருவதாக, புனர்வாழ்வு அதிகாரி பீ.பீ.எச். பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 12000 பேர் புனர்வாழ்வளிப்பின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் 10 பேர் வரையில் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment