July 6, 2015

சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு!

சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.கலையரசன் அமைப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயிலில் மன்மத வருட தேர், தீர்த்த உற்சவங்களின் போது தாயகத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் நோக்கில் சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு 75 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இவ் உதவியை வழங்கிய சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினருக்கு அதிதிகள் மற்றும் மாணவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment