April 14, 2015

அண்ணல் அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!

அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலை, (துறைமுகம் அருகில்) உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ஆட்சிமன்றக்குழு உறுப்பினரும் காஞ்சி மாவட்டச் செயலாருமான பாலவாக்கம் சோமு, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், ஆபத்து உதவிக்குழுச் செயலாளர் பூவை கந்தன், மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் முராத் புஹாரி, வெளியீட்டு அணி துணைச் செயலாளர் எம்.எல்.எப்.ஜார்ஜ், பகுதிச் செயலாளர் துறைமுகம் எம்.இ. நாசர் உள்ளிட்ட மாநில- மாவட்ட - பகுதி - வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment