April 14, 2015

சுன்னாகம் எண்ணெய் கசிவு விடயத்தில் சர்வதேச தலையீடு அவசியம் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

சுன்னாகம் எண்ணெய் கசிவு விடயத்தில் சர்வதேசத்தின் உதவி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளர்.

சர்வதேச வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்.


வடமாகாண சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகளை நம்பமுடியாமல் இருக்கிறது.

அரசாங்கம் மாறுபட்ட தகவலை வெளியிடுகிறது.

இந்த நிலையில் சர்வதேசத்தின் உதவியை பெற்று சுன்னாகம் எண்ணெய் கசிவு சம்பந்தமான முழுமையான, நம்பகத்தன்மையான ஆய்வை நடத்த அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment