April 9, 2015

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இந்த சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. 


எனினும் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மாத்திரமே பங்கு பற்றி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் எதிர்வரும் 17ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment