February 22, 2015

மகிந்த ராஜபக்சவின் மனைவிக்கு ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஷிரந்திக்கு எதிராக!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவிக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லையென ஆங்கில இணையத்தளம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி, உண்மைக்கு மாறான விடயங்களை கொடுத்து அரசை ஏமாற்றியமைக்காக கைது செய்யத் துடிக்கும் பொலிஸார், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஷிரந்தி ராஜபக்ச, சிரிலிய சவிய என்ற பெயரில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று நடத்தியமை மற்றும் 222222222 V என்ற போலி அடையாள அட்டைகளை விநியோகித்து வங்கி கணக்குகளை ஆரம்பித்தமை சட்டத்தை மீறும் செயல்.
அடையாள அட்டைக்கு உரித்தவரான ஜனாதிபதியின் மனைவி மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆங்கில இணையத்தளம் கேள்வி எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment