February 22, 2015

லஞ்ச, ஊழல் தொடர்பில் பெரும் தலைகள் பல விரைவில் சட்டத்தின் முன்!

கடந்த ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் லஞ்ச, ஊழல்
விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு 521 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இம்முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும் தலைகள் அடுத்துவரும் ஓரிரு மாதங்களுக்குள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் சொலிசிட்ட ஜெனரலுமான டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த பெரும் தலைகள் மத்தியில் அரசியல் பெரும் புள்ளிகளும் இருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment