February 22, 2015

ரணில் மகிந்தவின் ஆதரவாளர்களுக்கு சவால்!

முடியுமாக இருந்தால் தேர்தலில் மகிந்தவை நிறுத்தி வெற்றி பெற செய்து காட்டுங்கள் என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திர கட்சியில் மகிந்த போட்டியிட அனுமதிக்கப்பட போவதில்லை.
அவர் உடைந்து போன சக்கர சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். ஆனால் சிலர் தங்களின் சுயநலத்துக்காகவே அவரை இந்த தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சிக்கிறார்கள்.
நான் அவருடன் ஒரு முறைதான் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். அதன் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களை வாக்களிக்க அனுமதிக்காததால்தான் மகிந்த வெற்றி பெற்றார்.
அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் மகிந்தவை போட்டியிட செய்து முடிந்தால் வெற்றி பெற செய்யுங்கள்.
ஆனால் மகிந்த இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment