February 8, 2015

காணாமல் போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி நாளை யாழினில் கண்டன ஆர்ப்பாட்டம்!

காணாமல் போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முதல் மாவட்ட செயலகம் வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.நாளை திங்கட்கிழமை (09) இந்த மாபெரும் கவனீயீர்ப்பு
போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக வடக்கு கிழக்கு மாகாண காணாமல் போனவர்களின் உறவுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அரசு மற்றும் அரச ஒட்டுக்குழுக்களினால் கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரியும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் அண்மைக் காலங்களில் வடக்கு கிழக்கு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நாளை  9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைதிப் பேரணி ஆரம்பித்து வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்படும் என வடக்கு கிழக்கு மாகாண காணாமல் போனவர்களின் உறவுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் பெருமளவினில் திரண்டு குரல் கொடுக்க வேண்டுமென வடக்கு கிழக்கு மாகாண காணாமல் போனவர்களின் உறவுகளின் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment