February 23, 2015

யாழில் இளம்யுவதி காதல் தொடர்பாடல் தற்கொலை !!

ஊர்காவற்துறை – நாராந்தனை வடக்கு பிரதேச வீடொன்றில் இளம்யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஊர்காவற்துறை
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாராந்தனை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் தொடர்பாடல் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த தற்கொலைக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment