February 15, 2015

கிளிநொச்சி விபத்தில் நால்வர் படுகாயம்!

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஏ-9 வீதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தங்கியுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்துக்கு சொந்தமாக பிக் அப் ரக வாகனமே விபத்துக்குள்ளானது.
வாகனத்தில் பயணித்தவர்கள் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டனர்.அவர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.auto_accident

No comments:

Post a Comment