January 27, 2015

குமரன் பத்மநாதனின் வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பு1

குமரன் பத்மநாதனின் வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன் படி அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 19ம் திகதி ஜே வி பி கே.பியை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது.
அத்துடன் மகிந்தராஜபக்ஷ அரசாங்கம் கே.பியின் சொத்துக்களை பெற்றுக் கொண்டு அவரை தண்டனையில் இருந்து பாதுகாத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதும், சட்ட மா அதிபருக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment