December 27, 2014

மகிந்த ஊழல் புரிந்தவர் என்பதை 80 சதவீதமான மக்கள் நம்புகின்றனர் – விக்கலீக்ஸ்

சிறிலங்காவில் உள்ள மக்களில் 80 சதவீதமானவர்கள் மகிந்த ராஜபக்ஷ ஊழல் புரிந்துள்ளமையை ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிற்காக மக்கள் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டு வரும் சுனிமல் பெர்ணான்டோ, முன்னாள் அமெரிக்க தூதுவர் பெற்றீசியா புட்டினிஸிடம் இந்த தகவலை கூறியுள்ளார்.

அதேநேரம் மகிந்தவின் குடும்பத்தினர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக 85 சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment