November 30, 2014

பாண்டிச்சேரியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்!



எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் வழிக்காட்டுதலின்படி மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக் கூட்டம் பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார். கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு வரவேற்புரையாற்ற, இளஞ் சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளர் பொதினிவளவன் முன்னிலை வகித்தார். தோழர்கள் அரசு வணங்காமுடி, அமுதவன் உரையாற்றினர். நிறைவாக பொதுச் செயலாளர் ரவிக்குமார் மாவீரர் நினைவு உரையாற்றினார்.
முன்னதாக ஈகச்சுடரை தோழர் வன்னிஅரசு ஏற்ற சிறுத்தைகள் அனைவரும் அகவணக்கம் செலுத்தினர்.




No comments:

Post a Comment