காமன்வெல்த் மனித உரிமைகள் ஆற்றல் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2001 முதல் 2013–ம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து சர்வே நடத்தியது.
குறிப்பாக பெண்கள் வல்லுறவு விகிதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.
அதில் நாள்தோறும் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் காமுகர்களால் வல்லுறவுக்குள்ளாவது தெரியவந்துள்ளது. கடந்த 13 வருடங்களில் நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 844 வல்லுறவு வழக்குகள் பதிவாகி உள்ளன.
அவற்றில் டெல்லியில் மட்டும் 8,060 வல்லுறவுகள் நடந்துள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 56 வல்லுறவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதற்கிடையே 2001–ம் ஆண்டில் மட்டும் 16,075 வல்லுறவு வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 33,707 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இது 52.30 சதவீதம் அதிகமாகும்.
மராட்டியத்தில் வல்லுறவு வழக்குகள் 135 சதவீதம் கூடுதலாக பதிவாகி உள்ளது. அங்கு 2001–ம் ஆண்டில் 1,302 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 3,063 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகம், ராஜஸ்தான், உத்ரகாண்ட், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 2001–ம் ஆண்டில் 2 மடங்கு வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ளன.
2013–ம் ஆண்டில் பாலியல் வன் கொடுமை சட்டம் திருத்தப்பட்டது. அதை தொடர்ந்து மேற்கண்ட மாநிலங்களில் இது குறித்த வழக்குகள் அதிக அளவில் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டன. சட்ட திருத்தத்துக்கு பிறகு மேற்கு வங்காளத்தில் வல்லுறவு குற்றங்கள் குறைந்துள்ளன. 2012–ம் ஆண்டில் 2046 ஆக இருந்த வல்லுறவு சம்பவம் 2013–ம் ஆண்டில் 1685 ஆக குறைந்து இருந்தது.
டெல்லியில் 8,060 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தமிழ்நாடு (7,875 வழக்குகள்), கர்நாடகா (6,204), குஜராத் (4,981) ஆகிய மாநிலங்களை விட அதிக அளவாகும்.
2012–ம் ஆண்டில் 1 லட்சத்து ஆயிரத்து 41 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 785 வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. அதில் 2013–ம் ஆண்டில் 14,717 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 18,833 வழக்குகளும் விசாரணை முடிக்கப்பட்டன.
2012–ம் ஆண்டில் 3,563 பேருக்கு வல்லுறவு வழக்கில் தண்டனை கிடைத்தது. அதே நேரத்தில் 2013–ம் ஆண்டில், 5,101 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்றும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள் வல்லுறவு விகிதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.
அதில் நாள்தோறும் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் காமுகர்களால் வல்லுறவுக்குள்ளாவது தெரியவந்துள்ளது. கடந்த 13 வருடங்களில் நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 844 வல்லுறவு வழக்குகள் பதிவாகி உள்ளன.
அவற்றில் டெல்லியில் மட்டும் 8,060 வல்லுறவுகள் நடந்துள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 56 வல்லுறவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதற்கிடையே 2001–ம் ஆண்டில் மட்டும் 16,075 வல்லுறவு வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 33,707 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இது 52.30 சதவீதம் அதிகமாகும்.
மராட்டியத்தில் வல்லுறவு வழக்குகள் 135 சதவீதம் கூடுதலாக பதிவாகி உள்ளது. அங்கு 2001–ம் ஆண்டில் 1,302 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 3,063 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகம், ராஜஸ்தான், உத்ரகாண்ட், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 2001–ம் ஆண்டில் 2 மடங்கு வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ளன.
2013–ம் ஆண்டில் பாலியல் வன் கொடுமை சட்டம் திருத்தப்பட்டது. அதை தொடர்ந்து மேற்கண்ட மாநிலங்களில் இது குறித்த வழக்குகள் அதிக அளவில் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டன. சட்ட திருத்தத்துக்கு பிறகு மேற்கு வங்காளத்தில் வல்லுறவு குற்றங்கள் குறைந்துள்ளன. 2012–ம் ஆண்டில் 2046 ஆக இருந்த வல்லுறவு சம்பவம் 2013–ம் ஆண்டில் 1685 ஆக குறைந்து இருந்தது.
டெல்லியில் 8,060 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தமிழ்நாடு (7,875 வழக்குகள்), கர்நாடகா (6,204), குஜராத் (4,981) ஆகிய மாநிலங்களை விட அதிக அளவாகும்.
2012–ம் ஆண்டில் 1 லட்சத்து ஆயிரத்து 41 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 785 வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. அதில் 2013–ம் ஆண்டில் 14,717 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 18,833 வழக்குகளும் விசாரணை முடிக்கப்பட்டன.
2012–ம் ஆண்டில் 3,563 பேருக்கு வல்லுறவு வழக்கில் தண்டனை கிடைத்தது. அதே நேரத்தில் 2013–ம் ஆண்டில், 5,101 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்றும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment