May 15, 2014

வீட்டில் இருந்த பெண் தீயில் கருகி பலி!

பொதுஹெர - தியாமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தீப்பற்றி
பெண்ணொருவர் பலியாகியுள்ளார். நேற்று இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

சில நாட்களுக்கு முன்னர் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், குறித்த பெண் இருந்த அறை மட்டுமே சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் குறித்த வீட்டில் 52 வயதான அந்தப் பெண் மட்டுமே தனியாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. 

எது எவ்வாறு இருப்பினும் தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொதுஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment