May 15, 2014

சிங்கள அரசின் பொய் முகத்தை உடைப்போம் - யேர்மனியில் இளையோரின் துண்டுப்பிரசுரப் போராட்டம்

யேர்மனி  மற்றும் இலங்கை இடையான தூதரக உறவுவின் 60 வது ஆண்டு விழா Frankfurt நகரில் ஆடம்பரமாக நடைபெற இருக்கின்றது . இவ் விழா இலங்கை விமான மற்றும் தூதரக கவுன்சில் ஒத்துழைப்புடனும்  யேர்மனுக்கான   இலங்கை வர்த்தக சபையின் அணுசரணையுடன் இவ்  கூட்டு நிகழ்வு நடைபெறுகின்றது .

இவ் நிகழ்வில் யேர்மன் இராஜதந்திரிகள் ,வர்த்தக சபை பிரதிநிதிகள் , மற்றும் வேறு  விருந்தினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர் .

 தமிழின அழிப்பை தொடர்ந்து மேற்கொள்ளும் சிங்கள பேரினவாத அரசின் பொய் முகத்தை கிழித்து அங்கு வருகை தர இருக்கும் வேற்றின மக்களிடம் சிறிலங்காவை புறக்கணிக்க சொல்வோம் . தமிழின அழிப்புக்கு நீதி கேட்போம் .இலங்கை அரசின் இனவழிப்பைக் வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரப் போராட்டம் பரந்த அளவில் மேற்கொள்ளப்படும் .

துண்டுப்பிரசுரப்போராட்டம்  நடைபெறும் இடம் :
United Hostel Theatre முன்பாக
Kaiserstr. 52
60329 Frankfurt

நேரம் : மாலை 6 மணிக்கு

தகவல் : தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி

No comments:

Post a Comment