May 7, 2014

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்ட யானை பலி!

முல்லைத்தீவு மாங்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் பளை நோக்கிப் பயணித்த
கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக வடக்கு மார்க்கத்தினூடான இருபுகையிரத சேவைகள் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர புகையிரதமும் கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்த புகையிரதமுமே தாமதமாகியுள்ளன.
வடக்கில் அண்மைகாலங்களில் புகையிரதங்களில் மோதுண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment