May 19, 2014

சென்னை மெரீனாவில் இனப்படுகொலை நாள் நினைவேந்தல்

மெரீனாவில்  இன்று மாலை இனப்படுகொலை  நாள் நினைவேந்தல் நிகழ்வு நடை பெற்றது . இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.
தமிழீழம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்ற உறுதியுடன் நிகழ்வு நடை பெற்றது.

விடுதலை புலிகளின் தடை 5 ஆண்டு இந்தியா நீடுத்திருக்கும் நிலையில் மெரீனா கடற்கரையில் தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களுடன் மக்கள் திரளாக ஒண்டு கூடினர்.

இக் கூட்டத்தை மே 17 இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது , இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன்  ,கோவை ராமகிருஷ்ணன் , தமிழ்தேசிய பொதுவுடைமை கட்சி மணியரசன் , ஓவியர் வீரசந்தம் , பொழிலன் , மேலும் பலர் கலந்து ஈழத்தில் இறந்த மக்களுக்கும் , மாவீரர்களுக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம்  செலுத்தினர்.

No comments:

Post a Comment