May 21, 2014

ராஜீவ் காந்தியின் நினைவு நாளை ரத்து செய்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் நிகழ்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் வழமைபோல் இன்றும்  நடைபெறவிருந்த தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியே முதலமைச்சர் ஜெலலிதாவினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரின் இந்த  நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால், பயங்கரவாத உறுதிமொழி ஏற்பதை தமிழக அரசு ரத்து செய்தது ஏன். இது வருத்தம் அளிக்கிறது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment