மட்டக்களப்பு, ஆரையம்பதியில் கடந்த 15 திகதி இரவு தாக்கப்பட்டு
படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்
பட்டிருந்த நபர், உயிரிழந்ததை தொடர்ந்து, தாக்குதல் நடத்தியோரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி இரவு ஆரையம்பதி திருநீற்றுகேணி கிழக்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் பிரகாஷ் (வயது 26) என்ற இளம் குடும்பஸ்தர், கடைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் சிலர் பொல்லுகளால் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை, ஊர் மக்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்.
எனினும், இவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளனதால் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலைியல், உயிரிழந்தவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தலை மறைவனதால் ஆத்திரமுற்ற மக்கள் அவர்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்விரோதம் காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டிருந்த நபர், உயிரிழந்ததை தொடர்ந்து, தாக்குதல் நடத்தியோரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி இரவு ஆரையம்பதி திருநீற்றுகேணி கிழக்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் பிரகாஷ் (வயது 26) என்ற இளம் குடும்பஸ்தர், கடைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் சிலர் பொல்லுகளால் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை, ஊர் மக்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்.
எனினும், இவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளனதால் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலைியல், உயிரிழந்தவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தலை மறைவனதால் ஆத்திரமுற்ற மக்கள் அவர்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்விரோதம் காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment