April 22, 2014

கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் நால்வர் கைது!

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் போலி இறப்பர் முத்திரை தாயாரித்த குற்றச்சாட்டில் நான்குபோ்
கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள். காவல்துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது போலியான இறப்பர் முத்திரை மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment