August 18, 2016

அமெரிக்காவின் ஹவாய் தீவில் மட்டக்களப்பு மாணவனின் நூல் வெளியானது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முது தத்துவமாணிப் பட்டப்பின் படிப்பினை தொடர்ந்து கொண்டிருக்கும் செங்கலடி, கணபதிப்பிள்ளை நகரில் வசித்து வரும் சண்முகம் பாஸ்கரன் என்பவரால் கிழக்குப் பல்கலைக்கழக
கலைகலாசார பீடத்தின் இந்து நாகரிகத் துறையில் இந்து நாகரிக சிறப்புக்கற்கை நெறியின் ஒரு பகுதியை நிறைவு செய்யும் பொருட்டு “அமெரிக்க கவாய் இந்து ஆச்சிரமம்” எனும் தலைப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்துநாகரிக துறைத்தலைவரான திருமதி.சாந்தி கேசவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க பட்டிருந்தது.

அவ் ஆய்வு கட்டுரையானது தற்போழுது நூலாக அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள “கவாய் இந்து ஆதீனத்தினால்” வெளியிடப்பட்டுள்ளது.
இவ் வெளியீடானது இந்து சமயத்தின் பெருமையை உலகளாவிய ரீதியில் பறை சாற்றுவற்றுவதாக அமைந்துள்ளது.




No comments:

Post a Comment