July 13, 2016

சாந்தனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்! சீமான்!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள சாந்தனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ராஜூவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டணை பெற்றுள்ள சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது கோரிக்கை அடங்கிய கடிதத்தை அவர், இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது உணர்வை மதிக்க வேண்டும்.

செய்யாத குற்றத்திற்காக தழிழக சிறையில் உள்ள போது தனது தந்தையை இழந்துள்ளார். இலங்கை சிறையில் இருந்தால் அவரது உறவினர்கள் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனாலும் குற்றமற்றவர் என்று நிருபிப்பதற்கே நாம் போராட வேண்டியுள்ளது. சட்டத்தரணிகள் இலங்கை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு தமிழ் உணர்விற்காக போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தராதது வருத்தம் அளிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment