August 18, 2016

விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் சரணடைந்த பின் காணாமற்போயினர்! - ஐ.நாவுக்கு அறிக்கை!

விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியான யாஸ்மீன் சூகா இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அருட்தந்தை பிரான்ஸிஸ் தமக்கு தகவல்களை வழங்கியதாக சூகா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
எனினும், விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் 200 பேர் காணாமல்போயுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயிருந்தால் யார் போர் செய்தார்கள் என சிரேஸ்ட அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment