July 5, 2016

அவன்காட் கப்பலின் கப்டனுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


கடந்த 23ம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும்அவன்காட் கப்பலின் தலைவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 18ம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதிமன்றநீதவான் இன்று உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் பிரஜையான குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் காலிதுறைமுகப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தமைமற்றும் துப்பாக்கி, வெடிப்பொருட்கள் உள்ளிட்டவையை சட்டவிரோதமாக தம்வசம்வை;ததிருந்த குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகதெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment