July 23, 2016

ஜேர்மன் தாக்குதல்தாரி தற்கொலை!

ஜேர்மனியில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய தாக்குதல்தாரி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். ஜேர்மனியின் மூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.


இந்த தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரது உடலை, பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் நடத்தப்பட்ட வணிக வளாகத்தின் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஒரு கி.மீற்றர் தொலைவில் இருந்து இந்த சடலம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

வெடிப்பொருட்கள் எதுவும் உள்ளனவா என உடலை சோதித்து உறுதி செய்த பொலிஸார் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்த பின்னரே உடலை கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே, தாக்குதல்தாரி இஸ்லாமிய ஆதரவு முழக்கங்கள் எழுப்பியதாக கூறப்படுகின்ற நிலையில் அவையெதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், பாதுகாப்பு கருத்தி Moosach மாகாணத்தை பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த திங்கள் கிழமை ஓடும் ரயிலில் பயணிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளபட்ட தாக்குதலின் போது பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










No comments:

Post a Comment