July 23, 2016

வவுனியாவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மாணவனின் சடலம்!

வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வவுனியா - முண்டிமுருப்பு பிரதேசத்தில் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


தனது மகனை காணாத தாய், அதுகுறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து நேற்றிரவு மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment