இலங்கை வங்கியின் 76 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இலங்கை வங்கி கிண்ணியாக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானப் பணி கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
கிண்ணியா இலங்கை வங்கிக் கிளையின் முகாமையாளர் ஏ.எஸ்.சமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வங்கி ஊழியர்கள் மற்றும் பணியாளர்களும் ஈடுபட்டனர்.
கிண்ணியா தள வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி ஏ.எச்.சமீம் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகள் இடம்பெற்றன.
இதேவேளை இலங்கை வங்கிக் கிண்ணியாக் கிளையினால் பாடசாலைகள் பொதுக் கட்டடங்கள் மையவாடிகள் என் பனவும் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment