தனிநபர் சுதந்திரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டுமென கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
எமது நாட்டில் பயங்கரவாத தடை சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கீர்த்தி தென்னக்கோன் மேலும் கூறுகையில், எமது நாட்டில் காணப்பட்ட 30 வருடகால யுத்தம் முடிவடைந்து இன்று சுமுகமான முறையில் ஜனநாயகம் காணப்படுவதோடு அனைத்து மாவட்டங்களிலும் நீதியான மற்றும் சுதந்திரமானதுமான முறையில் தேர்தல்களும் நடைபெற்றுள்ளன. அவ்வாறான நிலையில் தனிநபர் சுதந்திரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதனை கடந்த காலங்களில் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம். அந்தவகையில் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அரசில் எதனையும் தெரிவிக்காமை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறான நிலையில் இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான அடக்குமுறைச் சட்டமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுப்ப தோடு இதற்கு அனைவரும் அரசை வலியு றுத்தவும் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment