July 23, 2016

கிளிநொச்சியில் வைத்து சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞன் கைது

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரை பாலியஸ் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை வியாழக்கிழமை (21) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் மேற்படி சிறுமியும் இளைஞனும் காதலித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19ஆம் திகதியன்று, கொடிகாமம் பகுதிக்குச் சென்றுள்ள மேற்படி இளைஞன், குறித்த சிறுமியை தன்னுடன் அழைத்துக்கொண்டு கிளிநொச்சிக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பில், சிறுமியின் தாயாரினால், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த சிறுமியை, மறுதினமே அழைத்துவந்துள்ள மேற்படி இளைஞன், அவரை கொடிகாமத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போதே, அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சிறுமியின் வாக்குமூலத்தின் பிரகாரம், மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார், சந்தேகநபரான இளஞனை கைது செய்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில், அவரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment