ம ன்னாரில் நடைபெற்ற தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் என்ற தலைப்பிலான கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இது
பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது என்பதும்
குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம், கூட்டமைப்பின் இணைப்புக்குழு கூட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் என பலதரப்பட்ட மட்டங்களிலான கூட்டமைப்பின் கூட்டங்களில் மறைபொருளாகவும், வெளிப்படையாகவும் இறுக்கி மூடிய கதவுகளுக்குள் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள், மன்னாரில் நடைபெற்ற இந்த கருத்துப் பரிமாற்ற நிகழ்வில் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் இடம்பெற்றிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
ம ன்னாரில் நடைபெற்ற தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் என்ற தலைப்பிலான கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தமிழ்த்தேசிய கூட்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம், கூட்டமைப்பின் இணைப்புக்குழு கூட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் என பலதரப்பட்ட மட்டங்களிலான கூட்டமைப்பின் கூட்டங்களில் மறைபொருளாகவும், வெளிப்படையாகவும் இறுக்கி மூடிய கதவுகளுக்குள் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள், மன்னாரில் நடைபெற்ற இந்த கருத்துப் பரிமாற்ற நிகழ்வில் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் இடம்பெற்றிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
ம ன்னாரில் நடைபெற்ற தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் என்ற தலைப்பிலான கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தமிழ்த்தேசிய கூட்
இந்தக் கருத்தாடல் நிகழ்வுக்கு குறிப்பிட்டு அழைக்கப்பட்டவர்களே
அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சமூகம் மற்றும் அரசியல்
மட்டங்களில் பல தள நிலைகளில் உள்ளவர்கள் முக்கியமாகப்
பங்குபற்றியிருந்தனர்.
இந்தக் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு இடம்பெற்ற மன்னார் கீரியில் உள்ள ஞானோதயம் மண்டபத்தில் மூன்றரை வருடங்களுக்கு முன்னர் சிவில் சமூக அமையத்தினரால் முன்னாள் அருட் தந்தை ஜெயபாலன் தலைமையில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் முன்னிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது. இதில் சிவில் சமூக அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகளும் அருட்தந்தையர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கட்டமைப்புக்கு வெளியில், அப்போதைய நிகழ்கால அரசியல் மற்றும் தமிழ் அரசியலின் போக்கு என்பவற்றை ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கத்தக்க வகையில் இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் புறநிலை அரசியல் வெளியில் இடம்பெற்றிருந்த முக்கியமான ஒரு சந்திப்பாக அந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
ஆயினும் அந்த நிகழ்வு குறித்து விரிவான தகவல்கள் ஊடகங்களுக்கு உடனடியாக வழங்கப்படவில்லை. அதேபோன்று, அங்கு கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மக்களுக்கு வேறு சந்தர்ப்பங்களிலும் அரசியல் தலைவர்களினால் வெளியிடப்படவில்லை.
முதல் சந்திப்பின் முடிவுகள்
முடங்கிப் போயின
இந்த நிகழ்வு தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் மீது கடுமை கடைப்பிடிக்கப்பட்ட பின்பே தகவல்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுடைய அரசியல் பிரச்சினைபற்றி பல்வேறு தரப்புக்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களினாலும் பிரமுகர்களினாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு அப்போது தயக்கம் காட்டப்பட்டிருந்தது.
அன்றைய சந்திப்பில் மிக முக்கியமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள்ளே அர்த்த புஷ்டியான ஒற்றுமை நிலவ வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு, அதற்கானதோர் ஆரம்பகட்ட நிகழ்வாகவே அந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் சிவில் சமூகத்தினருடைய ஆலோசனைக்கமைவாக தமிழ் மக்களுடைய அரசியல் செயற்பாடுகளை ஒன்றிணைத்து முன்னெடுக்கும் நோக்கத்துடன், ஒரு தேசிய சபையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கமும் அந்தச் சந்திப்பில் மிக முக்கியமாக முன்வைக்கப்பட்டிருந்தது.
அரசியல்வாதிகள், துறைசார்ந்தவர்கள், சிவில் சமூகத்தினர் என பல தரப்பட்டவர்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கியதாக அந்தத் தேசிய சபையை உருவாக்க வேண்டும் என்றும் அந்தச் சபையே தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளில் முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டு செயற்படுத்துகின்றதோர் அங்கமாக அந்தச் சபை அமைய வேண்டும் என்றும் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் யாப்பு ஒன்றைத் தயாரிப்பதற்கான குழுவும் அமைக்கப்பட்டது,
ஆனால், அந்தச் சந்திப்புடன் அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களும், எடுக்கப்பட்ட முடிவுகளும்கூட, கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
இத்தகைய பின்னணியில்தான், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட 'தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்' என்ற தலைப்பிலான கருத்துப்பகிர்வு நிகழ்வு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவராகிய வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் மட்டக்களப்பு ஆயரும், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகருமாகிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் குறிப்பிட்டு அழைக்கப்பட்ட உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள், அரசியல் விமர்சகர்கள், செய்தியாளர்கள் என பலதரப்பட்டவர்களும் இந்தக் கருத்தாடல் நிகழ்வில் அழைப்பின்பேரில் கலந்து கொண்டிருந்தனர்.
காரசாரமான கருத்துக்கள்
சிவகரன் உட்பட ஐந்து பேர் இங்கு முக்கிய கருத்துரையாற்றினார்கள். சிவகரன் இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் குறித்து தனக்கே உரிய பாணியில் - பேச்சு நடையில் சமகால அரசியல் நிலைமைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொதுவான செயற்பாடுகள், அரசியல் தலைவர்களின் போக்குகள் செயற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். ஏனைய நான்கு பேரும் வெவ்வேறு தலைப்புக்களில் தமது கருத்துரைகளை வடிவமைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களில் பெயர் குறித்து அழைக்கப்பட்டவர்கள் முன்னால் வந்து தமது கருத்துக்களை முன் வைத்தனர். இவர்களில் ஊடகவியலாளர்களுக்கும் இடமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூர் அரசியல் மட்டத்திலும் சர்வதேச அரங்கிலும் தமிழ் அரசியலின் செல்நெறி போக்கு குறித்து இந்தக் கருத்துரைகளில் காட்டமான விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஜெனிவா மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இராஜதந்திர முறையில் முடக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு கருத்து காரசாரமான முறையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
நீதிக்கான நிலைமாறுகாலச் செயற்பாடுகள் பற்றியும், இணக்க அரசியல் என்று சாதாரணமாகக் கூறப்படுகின்ற – அரசாங்கத்துடன் மென்போக்கில் இணைந்து செயற்படுகின்ற நடைமுறை குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொதுவான செயற்பாடுகள் மற்றும் கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகள் என்பன பொதுவாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டன.
போருக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில் தமிழ் அரசியலில் குறிப்பிட்டு ஆறுதலடையத் தக்க வகையிலான முன்னேற்றங்கள் நிகழவில்லை என்று இங்கு இடித்துரைக்கப்பட்டது. சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சட்டம் ஒழுங்கைப் பேணும் விடயத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ள போதிலும், அதற்கேற்ற வகையில் நிலைமை பாதிக்கப்பட்ட மக்களை திருப்தி கொள்ளச் செய்யவில்லை என்பதும் இங்கு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள், கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகள் என்பன மக்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டத்தக்க வகையில் அமையவில்லை. அதற்கேற்ற வகையிலான வியூகங்களும், மூலோபாயச் செயற்பாடுகளும் காணப்படவில்லை என்பது இங்கு கூடியவர்களின் பொதுவான அரசியல் ஆதங்கமாக அமைந்திருந்தது. தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் நிலைமை குறித்து பலருடைய கருத்துக்களிலும் கரிசனையும் ஆழ்ந்த கவலையும் வெளியிடப்பட்டிருந்தது.
ஆயினும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஓரிருவரைத் தவிர ஏனைய அனைவரும் நிதானமாகவும், ஆழமாகவும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருந்தனர். எவரும் உணர்ச்சிவசப்படாதிருந்தமை இந்தச் சந்திப்பிற்கு மெருகூட்டியிருந்தது என்றே கூற வேண்டும்.
பொறுமையாகச் செவிமடுத்தனர்
இந்தச் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் மிகுந்த பொறுமையுடன் செவிமடுத்தனர். இடையிடையே தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், கருத்துக்களில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில் தாங்கள் முக்கியமாகக் கருதியவைகள் குறித்து குறிப்புக்களை எடுத்ததையும் காணக் கூடியதாக இருந்தது.
வன்முறையானதோர் ஆயுதப் போராட்டம் பேரழிவோடு முடிவுக்கு வந்ததன் பின்னர், மென்முறை போராட்டங்களின் ஊடாகவே தமிழ் மக்களின் அரசியல் நகர்த்தி, முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியிருக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருப்பதை இந்தக் கருத்தாடல் மிகத் தெளிவாகப் பிரதிபலித்துள்ளது. மென்முறை போக்கில் நல்லாட்சி அரசாங்கத்துடன் (இணக்க) அரசியல் நடத்தினாலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள எரியும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் மீது அதே மென்முறையில் அழுத்தங்களைப் பிரயோகித்து அரசாங்கத்தைச் செயற்பட வைக்க வேண்டும் என்ற கருத்து இங்கு வலியுறுத்தப்பட்டது.
அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்பதற்காக, பிரச்சினைகளுக்குள் சிக்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் நலன்களை பலிகொடுக்க முடியாது என்பது அழுத்தமாக இந்தக் கருத்தாடலில் வெளிப்பட்டிருந்தது.
பொறுமை காக்க வேண்டும். நிலைமைகளைக் குழப்பக் கூடாது. ஓரணியில் திரண்டு தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் வழமையான கூற்றுக்கள் வெளிப்படுத்தப்பட்டு இத்தகைய போக்கில் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கழிந்து, புதிய அரசாங்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழ் மக்களின் சார்பில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிச் செயற்பட்டு வந்தபோதிலும், பிரச்சினைகள் குறைவடைவதற்குப் பதிலாக பிரச்சினைகள் அதிகமாகியிருப்பதையும் மக்கள் சிலபல விடயங்களில் மோசமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதையும் இந்தக் கலந்துரையாடல் மிகுந்த அக்கறையுடன் வெளிப்படுத்தியிருந்தது.
தமிழ்த்தேசியம் தடுமாறவில்லை
இங்கு கருத்துரைத்தவர்களில் சிலர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள், கூட்டமைப்புத் தலைமையின் போக்குகள் என்பவற்றை நியாயப்படுத்தியிருந்தனர். வீணான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் வகையில் இங்கு பலர் கருத்துரைத்ததாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
தமிழ் அரசியல் தலைவர்களை ஓரங்கட்டி, அவர்கள் மீது வெறுமனே குற்றம் சுமத்துகின்ற போக்கில் கருத்துக்கள் வெளியிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றதுடன், நீங்கள் என்று தலைவர்களை மாத்திரம் சுட்டுவதை நிறுத்தி, நாங்கள் என்று பங்காளர்களாக விடயங்களுக்குப் பொறுப்பேற்று தலைவர்களை வழிநடத்த முயற்சிக்க வேண்டும் என்ற கருத்தும் இங்கு முன்வைக்கப்பட்டது.
இறுதியாக அரசியல் தலைவர்கள் வரிசையில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமாகிய சித்தார்த்தன், இந்தக் கருத்தாடலின் தலைப்பு குறித்தும் கருத்து வெளியிட்டார். (வேறு சிலரும் இது குறித்த தமது எண்ணப்பாடுகளை வெளியிட்டிருந்தனர்) தமிழ்த்தேசியம் தடம் மாறலாம். ஆனால் தடுமாறக்கூடாது. நாங்கள் அதனைத் தடுமாறவிடவும் மாட்டோம் என அழுத்தி உரைத்தார்.
'நாங்கள் பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டிருக்கின்றோம். தமிழ்த்தேசியமே அதற்கு முக்கிய காரணம். தமிழ்த்தேசியத்தில் புடம்போட்டவர்களே அரசியலில் இருக்கின்றார்கள். எனவே நாங்கள் அதில் ஒருபோதும் தடுமாறப் போவதில்லை. தமிழ்த்தேசியத்திற்கான போராட்டம் அல்லது அரசியல் செல்நெறியில் தடம் மாறலாம். உலகின் முக்கிய விடுதலைப் போராட்டங்கள் பலவும் தடம் மாறிச் செயற்பட்டிருக்கின்றன. அது அவசியமும்கூட. ஆனால் கொண்ட கொள்கையில் தடுமாறவில்லை. அவ்வாறே நாங்களும் செயற்படுகின்றோம்' என்றார் சித்தார்த்தன்
இங்கு கருத்துரைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தக் கருத்தாடலில் வெளியிடப்பட்ட ஆதங்கங்கள், கவலைகள், கரிசனைகள் தொடர்பான கருத்துக்கள் யாவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டங்களில் தங்களால் ஏற்கனவே வெளியிடப்பட்டவையே என சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு கருத்துக்களை வெளியிட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஒரு சிலரே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரிலான முடிவுகளை மேற்கொண்டு செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய போக்கில் மாற்றம் அவசியம். தமிழ் மக்களின் அரசியல் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு அது அவசியம். இன்றியமையாதது என குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மூன்றரை வருடங்களுக்கு முன்னர் இங்கு நடைபெற்ற அரசியல் சந்திப்பை நினைவுகூர்ந்து, அத்தகைய சந்திப்புக்கள் அதன் பின்னர் இடம்பெறாமல் போனமை குறித்து கவலை வெளியிட்டார். முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் முன்னிலையில் நடைபெற்ற அந்தச் சந்திப்பைப் போலல்லாமல் இந்தச் சந்திப்பு அடுத்தடுத்த கருத்துப் பரிமாறல்களுக்கும், பரிமாறப்படுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் காரியங்களை முன்னெடுத்து முன்னேறுவதற்கும் தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் என்ற கருத்தாடல் வழி சமைக்க வேண்டும். அதற்கான ஆரம்பப் புள்ளியாக இது திகழ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வழமையான போக்கில் மாற்றமில்லை
இறுதியாக இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்கள் எழுப்பியிருந்த நியாயமான கேள்விகள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமையின் மீது வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள், பொதுவான கருத்துக்கள் என்பன குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் பதிலளிக்கும் வகையில் கருத்துரையாற்றினர்.
இந்தக் கருத்தாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜாவின் மனதைப் பெரிதும் வருத்தியிருந்தன. வெளிப்படையாகவே அவர் அதனைக் குறிப்பிட்டார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களாகிய தங்கள் மீது அவ நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா என்ற தொனியில் அவருடைய கருத்துக்கள் சில அமைந்திருந்தன. வழமை போன்று நீண்ட உரையாற்றுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. அதனால் வரலாற்று நிகழ்வுகள் குறித்தும், தமது அரசியல் பயணத்தின் அனுபவங்கள் குறித்தும் பேசுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. ஆயினும் நீண்ட நேரம் உரையாற்றிய அவர் கருத்தாடலில் முக்கியமாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் பலவற்றிற்குப் பதிலளிக்கவில்லை.
அவரைத் தொடர்ந்து இறுதியாகக் கருத்துரைத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகவும் நிதானமாக விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கு முயற்சித்தார். நீண்ட வரலாறு ஒன்றை அவர் குறிப்பிட்டு, நிலைமைகளில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்ற போதிலும் முன்னேற்றம் போதாது என்ற யதார்த்த நிலைமையை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் நல்லாட்சி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விடயங்களில் குழப்ப வேண்டாம். பொறுமையாகச் செயற்பட வேண்டும் என்ற வழமையான பாணியில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
தமிழ் மக்களின் அரசியலை சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் எவ்வாறு முன்னகர்த்திச் செல்லலாம் என்பது குறித்து வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை. அது மட்டுமல்லாமல், அங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் எதிர்கால அரசியல் நகர்வு குறித்த விடயங்கள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் அவர் விளக்கிக் கூறவில்லை. மொத்தத்தில் இரு தலைவர்களினதும் கருத்துக்கள் இந்தக் கருத்தாடலின் வெற்றிக்கோ அல்லது முன்னேற்றத்திற்கோ வழி சமைப்பதாக அமையவில்லை.
இருப்பினும் தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் என்ற கருத்தாடல் நிகழ்வானது தமிழ் அரசியலையும் அதன் செல்நெறி போக்கையும் பகிரங்கமாக சுய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான அடித்தளம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. இது அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்வதன் மூலம் தமிழ் தரப்பு அரசியல் மந்த நிலைச் செயற்பாட்டிலிருந்து முன்னேற்றகரமான ஒரு நகர்வுக்கு இயங்கு பொறியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி வீரகேசரி
இந்தக் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு இடம்பெற்ற மன்னார் கீரியில் உள்ள ஞானோதயம் மண்டபத்தில் மூன்றரை வருடங்களுக்கு முன்னர் சிவில் சமூக அமையத்தினரால் முன்னாள் அருட் தந்தை ஜெயபாலன் தலைமையில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் முன்னிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது. இதில் சிவில் சமூக அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகளும் அருட்தந்தையர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கட்டமைப்புக்கு வெளியில், அப்போதைய நிகழ்கால அரசியல் மற்றும் தமிழ் அரசியலின் போக்கு என்பவற்றை ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கத்தக்க வகையில் இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் புறநிலை அரசியல் வெளியில் இடம்பெற்றிருந்த முக்கியமான ஒரு சந்திப்பாக அந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
ஆயினும் அந்த நிகழ்வு குறித்து விரிவான தகவல்கள் ஊடகங்களுக்கு உடனடியாக வழங்கப்படவில்லை. அதேபோன்று, அங்கு கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மக்களுக்கு வேறு சந்தர்ப்பங்களிலும் அரசியல் தலைவர்களினால் வெளியிடப்படவில்லை.
முதல் சந்திப்பின் முடிவுகள்
முடங்கிப் போயின
இந்த நிகழ்வு தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் மீது கடுமை கடைப்பிடிக்கப்பட்ட பின்பே தகவல்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுடைய அரசியல் பிரச்சினைபற்றி பல்வேறு தரப்புக்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களினாலும் பிரமுகர்களினாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு அப்போது தயக்கம் காட்டப்பட்டிருந்தது.
அன்றைய சந்திப்பில் மிக முக்கியமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள்ளே அர்த்த புஷ்டியான ஒற்றுமை நிலவ வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு, அதற்கானதோர் ஆரம்பகட்ட நிகழ்வாகவே அந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் சிவில் சமூகத்தினருடைய ஆலோசனைக்கமைவாக தமிழ் மக்களுடைய அரசியல் செயற்பாடுகளை ஒன்றிணைத்து முன்னெடுக்கும் நோக்கத்துடன், ஒரு தேசிய சபையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கமும் அந்தச் சந்திப்பில் மிக முக்கியமாக முன்வைக்கப்பட்டிருந்தது.
அரசியல்வாதிகள், துறைசார்ந்தவர்கள், சிவில் சமூகத்தினர் என பல தரப்பட்டவர்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கியதாக அந்தத் தேசிய சபையை உருவாக்க வேண்டும் என்றும் அந்தச் சபையே தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளில் முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டு செயற்படுத்துகின்றதோர் அங்கமாக அந்தச் சபை அமைய வேண்டும் என்றும் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் யாப்பு ஒன்றைத் தயாரிப்பதற்கான குழுவும் அமைக்கப்பட்டது,
ஆனால், அந்தச் சந்திப்புடன் அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களும், எடுக்கப்பட்ட முடிவுகளும்கூட, கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
இத்தகைய பின்னணியில்தான், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட 'தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்' என்ற தலைப்பிலான கருத்துப்பகிர்வு நிகழ்வு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவராகிய வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் மட்டக்களப்பு ஆயரும், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகருமாகிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் குறிப்பிட்டு அழைக்கப்பட்ட உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள், அரசியல் விமர்சகர்கள், செய்தியாளர்கள் என பலதரப்பட்டவர்களும் இந்தக் கருத்தாடல் நிகழ்வில் அழைப்பின்பேரில் கலந்து கொண்டிருந்தனர்.
காரசாரமான கருத்துக்கள்
சிவகரன் உட்பட ஐந்து பேர் இங்கு முக்கிய கருத்துரையாற்றினார்கள். சிவகரன் இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் குறித்து தனக்கே உரிய பாணியில் - பேச்சு நடையில் சமகால அரசியல் நிலைமைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொதுவான செயற்பாடுகள், அரசியல் தலைவர்களின் போக்குகள் செயற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். ஏனைய நான்கு பேரும் வெவ்வேறு தலைப்புக்களில் தமது கருத்துரைகளை வடிவமைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களில் பெயர் குறித்து அழைக்கப்பட்டவர்கள் முன்னால் வந்து தமது கருத்துக்களை முன் வைத்தனர். இவர்களில் ஊடகவியலாளர்களுக்கும் இடமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூர் அரசியல் மட்டத்திலும் சர்வதேச அரங்கிலும் தமிழ் அரசியலின் செல்நெறி போக்கு குறித்து இந்தக் கருத்துரைகளில் காட்டமான விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஜெனிவா மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இராஜதந்திர முறையில் முடக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு கருத்து காரசாரமான முறையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
நீதிக்கான நிலைமாறுகாலச் செயற்பாடுகள் பற்றியும், இணக்க அரசியல் என்று சாதாரணமாகக் கூறப்படுகின்ற – அரசாங்கத்துடன் மென்போக்கில் இணைந்து செயற்படுகின்ற நடைமுறை குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொதுவான செயற்பாடுகள் மற்றும் கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகள் என்பன பொதுவாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டன.
போருக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில் தமிழ் அரசியலில் குறிப்பிட்டு ஆறுதலடையத் தக்க வகையிலான முன்னேற்றங்கள் நிகழவில்லை என்று இங்கு இடித்துரைக்கப்பட்டது. சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சட்டம் ஒழுங்கைப் பேணும் விடயத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ள போதிலும், அதற்கேற்ற வகையில் நிலைமை பாதிக்கப்பட்ட மக்களை திருப்தி கொள்ளச் செய்யவில்லை என்பதும் இங்கு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள், கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகள் என்பன மக்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டத்தக்க வகையில் அமையவில்லை. அதற்கேற்ற வகையிலான வியூகங்களும், மூலோபாயச் செயற்பாடுகளும் காணப்படவில்லை என்பது இங்கு கூடியவர்களின் பொதுவான அரசியல் ஆதங்கமாக அமைந்திருந்தது. தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் நிலைமை குறித்து பலருடைய கருத்துக்களிலும் கரிசனையும் ஆழ்ந்த கவலையும் வெளியிடப்பட்டிருந்தது.
ஆயினும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஓரிருவரைத் தவிர ஏனைய அனைவரும் நிதானமாகவும், ஆழமாகவும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருந்தனர். எவரும் உணர்ச்சிவசப்படாதிருந்தமை இந்தச் சந்திப்பிற்கு மெருகூட்டியிருந்தது என்றே கூற வேண்டும்.
பொறுமையாகச் செவிமடுத்தனர்
இந்தச் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் மிகுந்த பொறுமையுடன் செவிமடுத்தனர். இடையிடையே தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், கருத்துக்களில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில் தாங்கள் முக்கியமாகக் கருதியவைகள் குறித்து குறிப்புக்களை எடுத்ததையும் காணக் கூடியதாக இருந்தது.
வன்முறையானதோர் ஆயுதப் போராட்டம் பேரழிவோடு முடிவுக்கு வந்ததன் பின்னர், மென்முறை போராட்டங்களின் ஊடாகவே தமிழ் மக்களின் அரசியல் நகர்த்தி, முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியிருக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருப்பதை இந்தக் கருத்தாடல் மிகத் தெளிவாகப் பிரதிபலித்துள்ளது. மென்முறை போக்கில் நல்லாட்சி அரசாங்கத்துடன் (இணக்க) அரசியல் நடத்தினாலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள எரியும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் மீது அதே மென்முறையில் அழுத்தங்களைப் பிரயோகித்து அரசாங்கத்தைச் செயற்பட வைக்க வேண்டும் என்ற கருத்து இங்கு வலியுறுத்தப்பட்டது.
அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்பதற்காக, பிரச்சினைகளுக்குள் சிக்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் நலன்களை பலிகொடுக்க முடியாது என்பது அழுத்தமாக இந்தக் கருத்தாடலில் வெளிப்பட்டிருந்தது.
பொறுமை காக்க வேண்டும். நிலைமைகளைக் குழப்பக் கூடாது. ஓரணியில் திரண்டு தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் வழமையான கூற்றுக்கள் வெளிப்படுத்தப்பட்டு இத்தகைய போக்கில் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கழிந்து, புதிய அரசாங்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழ் மக்களின் சார்பில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிச் செயற்பட்டு வந்தபோதிலும், பிரச்சினைகள் குறைவடைவதற்குப் பதிலாக பிரச்சினைகள் அதிகமாகியிருப்பதையும் மக்கள் சிலபல விடயங்களில் மோசமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதையும் இந்தக் கலந்துரையாடல் மிகுந்த அக்கறையுடன் வெளிப்படுத்தியிருந்தது.
தமிழ்த்தேசியம் தடுமாறவில்லை
இங்கு கருத்துரைத்தவர்களில் சிலர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள், கூட்டமைப்புத் தலைமையின் போக்குகள் என்பவற்றை நியாயப்படுத்தியிருந்தனர். வீணான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் வகையில் இங்கு பலர் கருத்துரைத்ததாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
தமிழ் அரசியல் தலைவர்களை ஓரங்கட்டி, அவர்கள் மீது வெறுமனே குற்றம் சுமத்துகின்ற போக்கில் கருத்துக்கள் வெளியிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றதுடன், நீங்கள் என்று தலைவர்களை மாத்திரம் சுட்டுவதை நிறுத்தி, நாங்கள் என்று பங்காளர்களாக விடயங்களுக்குப் பொறுப்பேற்று தலைவர்களை வழிநடத்த முயற்சிக்க வேண்டும் என்ற கருத்தும் இங்கு முன்வைக்கப்பட்டது.
இறுதியாக அரசியல் தலைவர்கள் வரிசையில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமாகிய சித்தார்த்தன், இந்தக் கருத்தாடலின் தலைப்பு குறித்தும் கருத்து வெளியிட்டார். (வேறு சிலரும் இது குறித்த தமது எண்ணப்பாடுகளை வெளியிட்டிருந்தனர்) தமிழ்த்தேசியம் தடம் மாறலாம். ஆனால் தடுமாறக்கூடாது. நாங்கள் அதனைத் தடுமாறவிடவும் மாட்டோம் என அழுத்தி உரைத்தார்.
'நாங்கள் பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டிருக்கின்றோம். தமிழ்த்தேசியமே அதற்கு முக்கிய காரணம். தமிழ்த்தேசியத்தில் புடம்போட்டவர்களே அரசியலில் இருக்கின்றார்கள். எனவே நாங்கள் அதில் ஒருபோதும் தடுமாறப் போவதில்லை. தமிழ்த்தேசியத்திற்கான போராட்டம் அல்லது அரசியல் செல்நெறியில் தடம் மாறலாம். உலகின் முக்கிய விடுதலைப் போராட்டங்கள் பலவும் தடம் மாறிச் செயற்பட்டிருக்கின்றன. அது அவசியமும்கூட. ஆனால் கொண்ட கொள்கையில் தடுமாறவில்லை. அவ்வாறே நாங்களும் செயற்படுகின்றோம்' என்றார் சித்தார்த்தன்
இங்கு கருத்துரைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தக் கருத்தாடலில் வெளியிடப்பட்ட ஆதங்கங்கள், கவலைகள், கரிசனைகள் தொடர்பான கருத்துக்கள் யாவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டங்களில் தங்களால் ஏற்கனவே வெளியிடப்பட்டவையே என சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு கருத்துக்களை வெளியிட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஒரு சிலரே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரிலான முடிவுகளை மேற்கொண்டு செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய போக்கில் மாற்றம் அவசியம். தமிழ் மக்களின் அரசியல் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு அது அவசியம். இன்றியமையாதது என குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மூன்றரை வருடங்களுக்கு முன்னர் இங்கு நடைபெற்ற அரசியல் சந்திப்பை நினைவுகூர்ந்து, அத்தகைய சந்திப்புக்கள் அதன் பின்னர் இடம்பெறாமல் போனமை குறித்து கவலை வெளியிட்டார். முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் முன்னிலையில் நடைபெற்ற அந்தச் சந்திப்பைப் போலல்லாமல் இந்தச் சந்திப்பு அடுத்தடுத்த கருத்துப் பரிமாறல்களுக்கும், பரிமாறப்படுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் காரியங்களை முன்னெடுத்து முன்னேறுவதற்கும் தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் என்ற கருத்தாடல் வழி சமைக்க வேண்டும். அதற்கான ஆரம்பப் புள்ளியாக இது திகழ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வழமையான போக்கில் மாற்றமில்லை
இறுதியாக இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்கள் எழுப்பியிருந்த நியாயமான கேள்விகள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமையின் மீது வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள், பொதுவான கருத்துக்கள் என்பன குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் பதிலளிக்கும் வகையில் கருத்துரையாற்றினர்.
இந்தக் கருத்தாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜாவின் மனதைப் பெரிதும் வருத்தியிருந்தன. வெளிப்படையாகவே அவர் அதனைக் குறிப்பிட்டார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களாகிய தங்கள் மீது அவ நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா என்ற தொனியில் அவருடைய கருத்துக்கள் சில அமைந்திருந்தன. வழமை போன்று நீண்ட உரையாற்றுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. அதனால் வரலாற்று நிகழ்வுகள் குறித்தும், தமது அரசியல் பயணத்தின் அனுபவங்கள் குறித்தும் பேசுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. ஆயினும் நீண்ட நேரம் உரையாற்றிய அவர் கருத்தாடலில் முக்கியமாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் பலவற்றிற்குப் பதிலளிக்கவில்லை.
அவரைத் தொடர்ந்து இறுதியாகக் கருத்துரைத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகவும் நிதானமாக விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கு முயற்சித்தார். நீண்ட வரலாறு ஒன்றை அவர் குறிப்பிட்டு, நிலைமைகளில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்ற போதிலும் முன்னேற்றம் போதாது என்ற யதார்த்த நிலைமையை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் நல்லாட்சி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விடயங்களில் குழப்ப வேண்டாம். பொறுமையாகச் செயற்பட வேண்டும் என்ற வழமையான பாணியில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
தமிழ் மக்களின் அரசியலை சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் எவ்வாறு முன்னகர்த்திச் செல்லலாம் என்பது குறித்து வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை. அது மட்டுமல்லாமல், அங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் எதிர்கால அரசியல் நகர்வு குறித்த விடயங்கள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் அவர் விளக்கிக் கூறவில்லை. மொத்தத்தில் இரு தலைவர்களினதும் கருத்துக்கள் இந்தக் கருத்தாடலின் வெற்றிக்கோ அல்லது முன்னேற்றத்திற்கோ வழி சமைப்பதாக அமையவில்லை.
இருப்பினும் தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் என்ற கருத்தாடல் நிகழ்வானது தமிழ் அரசியலையும் அதன் செல்நெறி போக்கையும் பகிரங்கமாக சுய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான அடித்தளம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. இது அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்வதன் மூலம் தமிழ் தரப்பு அரசியல் மந்த நிலைச் செயற்பாட்டிலிருந்து முன்னேற்றகரமான ஒரு நகர்வுக்கு இயங்கு பொறியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment