June 19, 2016

இயல் விருது அறிவிக்கப்பட்ட தமிழக கவிஞர் குமரகுருபரன் மாரடைப்பால் மரணம்!

தமிழக கவிஞர் குமரகுருபரன் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணமடைந்தார். இவருக்கு அண்மையில் கனடா இலக்கிய தோட்டம் இயல் விருது அறிவித்திருந்தது.


ஞானம் நுரைக்கும் போத்தல், மறுபடியும் முதலில் இருந்து ஆரேம்பிக்க முடியாது உள்ளிட்ட பல கவிதை நூல்களை இவர் எழுதியுள்ளார்.

கவிஞர் குமரகுருபரனின் இறுதிச் சடங்கு திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது. இதேவேளை அவரது உடல் சென்னையில் இன்று மாலை வரை இறுதி அஞ்சலிக்கு வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரகுரபரன் விருது பற்றி இறுதியாக பதிவிட்டது:-

உண்மையில் தமிழ்ச்சூழலில் ஒரு விருது இருக்கிற நூறு நண்பர்களை இழக்கச் செய்வது அல்லாமல் ஆயிரம் புதிய விரோதிகளை உருவாக்கவும் செய்கிறது.


விருதுகள் தமிழனுக்கு பழக்கமற்ற ஒன்றாக ஆனதின் வரலாறு அவமானத்துக்குரியது.முன் இருக்கும் எல்லா ஜாம்பவான்களும் சேர்ந்து செய்த பச்சைப் படுகொலை.

No comments:

Post a Comment