June 19, 2016

கிளிநொச்சி கரச்சியில் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ நூல் வெளியீடு!

எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திக்கடந்த நெருப்பாறு’ எனும் தலைப்பிலான முழு நீள நாவல், நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சி கரச்சி பிரதேச  சபை  மண்டபத்தில்  மூன்று மணியளவில்  வெளியிட்டு நிகழ்வு  ஆரம்பமாகியது.


யாழ்.போதனா வைத்தியசாலை பொறுப்பதிகாரி சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கின் வாழ்வியல் மற்றும் போரின் தாக்கம் என்பவற்றை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. நூலின் முதல் பிரதியை, வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா வெளியிட்டு வைத்தார்.

இன்  நிகழ்வில்  நாடாளுமன்ற  உறுப்பினர் எஸ்.சிறிதரன், வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா யாழ்.போதனா வைத்தியசாலை பொறுப்பதிகாரி சத்தியமூர்த்தி வடமாகாண  சபை  உறுப்பினர்  பசுபதிப்பிள்ளை ,  எழுத்தாளர்கள்  மக்கள்  என  பலர்  கலந்துகொண்டனர்.




No comments:

Post a Comment