August 29, 2015

யாழ். மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் அற்ற நிலையில் -நா.வேதநாயகன் !

யாழ். மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் அற்ற நிலையில் 35 ஆயிரம் குடும்பங்கள் இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட போர் நிலமைகளால் பெரும்பாலான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளதுடன் தமது சொந்த நிலங்களை விட்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வலி. வடக்கு, வலி. கிழக்குப் பகுதிகளில் மீள்குடியேறுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அதேநேரம் அவர்களுக்குத் தேவையான நிரந்தர வீடுகள், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டியிருக்கின்றது.
இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த மக்களின் தேவைப்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியக் குழுவினரிடமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment